மயக்கேமேனோ மழையே

30.மயக்கேமேனோ மழையே. . . ?

நீள்துயில் கொண்டாயோ - அல்ல
நினைவுகள்தான் மறந்தாயோ
நிலமணைத்த வான்மகளே
என்னை அணைக்க மறுப்பதேனோ?
தொட்டால் கெட்டுப்போவாயோ -அல்ல
தொடும் தகுதிதான் எனக்கில்லையோ ?
காத்திருப்பது என் வாடிக்கை - அதில்
உனக்கோ வேடிக்கை - தூரமா நீயிருந்து
நெஞ்சில் பாரந்தனை கொடுக்கின்றாய்
காலங்கடந்தாலும் வந்துவிடு
களிப்பினை தந்துவிடு
ஓ .. நானறிவேன்
இதயமற்ற மனிதர்கள் மத்தியில்
இரக்கமற்று போனாயோ நீயும்!

வறண்டது மண்மட்டும் அல்ல
மக்கள் இதயமும்தான் - உன் வருகை
எங்களுக்குள் பேருவகை
வா மழை மகளே - எங்கள்
வாழ்க்கை வளம் பெறவே

வேண்டுகோளுடன்
மு. ஏழுமலை.

எழுதியவர் : மு. ஏழுமலை (29-Mar-19, 4:16 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 72

மேலே