கண்ணியம் தேடும் பெண்ணியம்

முட்டிமுட்டி மெல்ல முளைக்கும் முகப்பருக்கள்
வெட்டிப்பேச்சில் மெல்ல நோகும் உணர்வலைகள்...

பதின்ம வயதென்றாலே பதறவைக்கும் பேருலகில்
மதிநோக்கி உயரெழுதல் பெண்ணினச் சாபமா...?

சீரற்ற சீருடையில் செந்நீரின் கசிவு
சீற்றத்தின் வேதனையில் கண்ணீர் மட்டும் கடனாய்...

ஓடித்திரிந்த வெண்புறா இனி ஓரிடத்தில் துயிலும்
கூடிவந்து பெண்களெல்லாம் தனி காரியங்களை பயிற்றும்...

ஏனிந்த பிறவியென கூணிக் குறுகவைக்கும்
தானியக் கிடங்குகளா தாவணிப் பெண்கள்...?

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (4-Apr-19, 10:09 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 60

மேலே