வள்ளுவனே வா துப்பாக்கியில் எழுத்தாணியோடு
வள்ளுவனேக் கொள்ளவில்லை மனம் - உலகில்
நடக்கும் நடப்புகளைக் கண்டு
கொல்லாமையையும் புலால் மறந்தலையும்
கூறினாயேக் குறளில் கம்பீரமாக
கேட்டதா கேடு நிறைந்த மானிடம்
கொல்லுதலுக்கு ஒரு குறள் எழுதி வைத்தாயா?
துப்பாக்கியில் எழுத்தாணியோடுப் பிறந்து வா
துடுக்கானவரைக் கொன்று குருதியால் குறள் எழுது
துணிவில்லை உன்னைப்போல் இவ்வுலகில் எமக்கு
தூயவனே என்றுத் தொடங்கும் உன் பிறப்பு.
- - - நன்னாடன்