அள்ளுகின்ற சொல்லை வைத்தோ

எவ்வகையாயினும் எவ்வுயிராயினும்
பிறந்திருப்பின் அது சிறந்ததாயினும்
சிறப்பில்லாது வாழ்ந்திருப்பினும்

சித்தத்தில் குறை உடையதாயினும்
சில காலமே வாழ்வதாயினும்
சிறந்த நற்பண்பு பெற்றதாயினும்

சிறு புல் பூண்டாயினும்
பெரிய மீன் யானை யாயினும்
அரிய பூமியில் பிறந்து விட்டால் -அனைத்து

இன்ப துன்பம் அடைந்தோ இல்லையோ
உயிர் அகல வேண்டும் கொண்ட தேகம் விட்டு
கோடான கோடி கொடுத்தோ-மனம்

அள்ளுகின்ற சொல்லை வைத்தோ
மந்திர தந்திர வித்தையை வைத்தோ
மறுவாழ்வு கிடைக்கக் கூடுமோ?
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (29-Apr-19, 10:53 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 3483

மேலே