கணக்கில்லா விளைநிலம்

மணல் எடுத்தான் மண் எடுத்தான்
மகத்தான மரங்கள் அழித்தான்
கடற்கரை கனிமம் எடுத்தான்
கம்பீர நீர் நிலை அழித்தான்
காணும் இயற்கையை எல்லாம்
காசு என்னும் வேசிக்கு விற்றான்
கல்லுக்காக மலையை அழித்தான்
கணக்கில்லா விளைநிலம் அழித்தான்
கண்ணை விற்ற பின் புருவத்தினை மழித்து
புது அழகு படைப்பது போல் வேதாந்தம் பேச
புகுந்துள்ள அரசியல் வியாதியை அழிப்போம்
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (30-Apr-19, 4:36 pm)
பார்வை : 35

மேலே