மகிழ்வோர் மன்றம் நகைச்சுவை நாள் 1152019 தொகுப்பு கவிஞர் இரா இரவி

மகிழ்வோர் மன்றம்!
நகைச்சுவை. நாள் 11.5.2019.

தொகுப்பு ;கவிஞர் இரா. இரவி.

******

பேனுக்கும் போனுக்கும் என்ன வித்தியாசம்
பேனு நம்மை தோண்டும், போனை நம்ம நோண்டுவோம்!

*****

வங்கிகளை சனிக்கிழமை மூடிவிட திட்டம்
அப்படியே காலாண்டு தேர்வு விடுமுறை முழு ஆண்டு தேர்வு விடுமுறை என்று விட்டு இரண்டு மாதம் மூடி விடுங்கள்.

*****

உங்களுக்கு ஒரு துன்பம் வரும்போது நண்பர்கள், உறவினர்கள்
உடன் இருப்பார்கள். நம்பவில்லை என்றால் திருமண நிழற்பட ஆல்பத்தைப் பாருங்கள்.

..............................

உங்க வீட்டில் சண்டை வந்தால்
அம்மா கை ஓங்கும், அப்பா கை வீங்கும்

*****

மேலாளர் : ஏன் தாமதம்?
நீங்க தானே கால நேரம் பார்க்காமல் வரவேண்டும்
என்று சொன்னீங்க.

*****

பூனைக்கு ஏண்டா மூக்கு வழியா பால் ஊத்துறே
பாவம் இது வாயில்லாத ஜீவன்!

*****

பணம் கட்டினால் கடவுளை அருகே பார்க்கலாம்
அனாதை இல்லத்திற்கு பணம் கட்டினால்
உங்களையே கடவுளாகப் பார்ப்பார்கள்!

*****

கோழி முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வரும்
வாத்தியார் முட்டை போட்டால் கோழிக்குஞ்சு வருமா?

*****

ஏண்டா மாத்திரையை கீழே போடுறே
மருத்துவர் சொன்னார், தலைவலி வந்தால்
மாத்திரை போடுங்க என்றார்.

*****

கல்யாணம் ஆகாதவனுக்கு முடி விழுகுதேன்னு கவலை
கல்யாணம் ஆனவனுக்கு அடி விழுகுதேன்னு கவலை

*****

பொய்யான பல் மருத்துவர்னு எப்படி கண்டுபிடிச்ச
பல் ஆடுதுனு சொன்னால் எந்தப்பாட்டுக்கு ஆடுதுனு கேட்டாரு!

*****

உப்பு சைவமா? அசைவமா?
சாம்பாரில் போட்டால் சைவம், கறிக்குழம்பில் போட்டால் அசைவம்!

*****

இந்தியாவோட இன்சியல் என்ன? G எப்படி?
தேசப்பிதா காந்தி, அப்படினா G தானே?

*****

கதை எழுதும் ஆசிரியரை விளம்பரம் எழுதச் சொன்னது தப்பாப் போச்சு ஏன்?

எல்லாம் சொல்லிட்டு கடைசியில் உண்மையல்ல எல்லாம் கற்பனையேனு சொல்லிட்டார்.


,*****


கணவன் : இதெல்லாம் காபியா? நாய் கூட குடிக்காது.
மனைவி : நாய்க்கு நான் பூஸ்ட் கொடுத்திட்டேன்.

*****

விசா இல்லாமல் வியட்நாமுக்கு கூட போகலாம்
வேலை இல்லாமல் சொந்தக்காரனுக வீட்டுக்குப் போக முடியாது.

*****

மருத்துவர் : (எல்லா சோதனையும் செய்து விட்டுச் சொன்னார்) உங்க மனைவிக்கு கொழுப்பு அதிகம்.

கணவன் : எனக்கு முன்பே தெரியுமே! இதுக்கு போய் 1000 ரூபாய்
செலவு வச்சிட்டீங்களே!

*****

நோயாளி : வெயில் தாங்கலே, ஐஸ்யில் இருக்கனும் போல இருக்கு .
மருத்துவர் : அவசரப்படாதீங்க, அறுவை சிகிச்சை முடிஞ்சதும்
நிரந்தரமா ஐஸ் பெட்டிக்கே போயிடுவீங்க.

*****

சத்தம் சோறு போடுமா? எப்படி.
குக்கர் சத்தம் போட்டால் தான் சோறு கிடைக்கும்.

*****

தோழியிடம் சொன்னாள் : குடிச்சிட்டு வந்தா வீட்டு வாசற்படி மிதிக்காதேன்னு கணவனிடம் சொன்னேன்.தப்பாப் போச்சுடி
அந்த ஆளு குடிச்சிட்டு வந்து ஓட்டைப் பிரித்து வாரான்.

*****

உங்க வீட்டுக்காரரை திட்டுவியா?
சே சே திட்டவே மாட்டேன் .அடிப்பதோடு சரி!

*****

மருத்துவர் : பயப்படாதீங்க தைரியமா இருங்க
நோயாளி : நோயுக்கே பயப்படலே, உங்க கட்டணத்துக்காக பயப்படுறேன்.

*****

பணத்தை எல்லாம் பிடுங்கி விட்டு
அன்பளிப்பாக பர்ஸ் தரும் இடம் நகைக்கடை!

*****

ஏன் தாமதம் (ஆசிரியர்)
மாணவன் : பள்ளி அருகே உள்ளது. மெதுவாகச் செல்லவும் என்று எழுதி இருந்தது.

*****

என்னால பச்சை முட்டை சாப்பிட முடியாது ஏன்?
எங்க ஊரில் வெள்ளை முட்டை தான் கிடைக்கும்.

*****

மனைவி : ஏங்க சொர்க்கத்தில் கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடியாதாமே!
கணவன் : ஆமாண்டி அதனால் தான் அதுக்குப் பெயர் சொர்க்கம்.

*****

ஏன் மருந்து பாட்டிலை தடவிக்கிட்டி இருக்கே
மருத்துவர் சொன்னார் வலி வந்தா தடவுங்க என்று

*****

போன வருடம் வெயிலுக்கு ஆதார் கார்டு மாதிரி முகம் ஆச்சு!
இந்த வருடம் வெயிலுக்கு முகம் ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிருச்சு

*****

இரவு தூக்கம் வரவில்லை என்று கவலைப்பட்டேன்
பிறகு தான் புரிந்து கொண்டே உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்று!

*****

ஏணிப்படியாக இருக்க வேண்டியவர்கள்
ஏன் இப்படி எனக் கேட்கும்படி ஆகிவிடுகிறார்கள்!

*****

அப்பா, அம்மாவிடம் அடி வாங்காதவன் கூட
கொசுவிடம் கடி வாங்குவான்!

*****

உங்க மகன் கீதைப்படி நடப்பவனா? எப்படி
என் மருமகள் பெயர் கீதை!

*****

மருத்துவர் ;உன் உதட்டில் எப்படி தேள் கொட்டியது ?

மனைவியை கொட்டியதற்காக தேளுக்கு முத்தம் கொடுத்தேன்

*****

தை மாதம் சூரியனுக்கு நாம் பொங்க வைப்போம்
சித்திரை மாதம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்!

*****

அசைவ உணவு விடுதியில் சர்வரிடம் மூளை இருக்கா?
உங்களுக்கு முன்னாடி வந்தவங்க எல்லாருக்கும் இருந்தது!
உங்களுக்குத் தான் இல்லை.!தீர்ந்து போச்சு

*****

சாம்பாரில் போட்டு இருந்த முருங்கைக்காய் சூப்பரா இருந்திச்சு
சர்வர் : அது என் காதில் இருந்த பென்சில். தவறி சாம்பாரில் விழுந்துவிட்டது.

*****

மாலை எதுக்கு வாங்கச் சொல்றீங்க
(மருத்துவர்;அறுவை சிகிச்சையில் இவர் பிழைத்து விட்டால் எனக்குப் போடுங்க. இறந்துவிட்டால் அவருக்குப் போடுங்க!



.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-May-19, 4:56 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 134

மேலே