ஒருதலைக்காதல்

எழுதுகிறேன் இங்கு ஒரு கவிதை, என்னை ஒருதலைக்காதலில் திளைக்கும் ஒர் ஆணாக பாவித்துக்கொண்டு
அவன் காதலில் உருகி படும் பாடு ,அதை நோக்கிய ஒரு பயணம் இதோ,,,..


புரண்டேன் உன் விழி தடத்தில்...!!
விழுந்தேன் உன் புகைப் படத்தில்...!!
கிடந்தேன் நீ வரும் இடத்தில்..........!!
தவமாய் தவமாய் பெண்ணே பெண்ணே..!!


உந்தன் கண் பார்வை காட்டுவாயோ....?
எந்தன் உடல் வியர்வை கூட்டுவாயோ...?
அதில் சிறு ஓவியம் தீட்டுவாயோ...?
இல்லை விலகி நின்றே வாட்டுவாயோ..?
உயிரே உயிரே பெண்ணே பெண்ணே..!!


காத்திருந்தேன் உனக்காய் மணி கணக்கில்,,...
பார்த் திருந்தேன் நீயோ வரும் கிழக்கில்,,..,
ஏற்றுவாயோ தீப ஒளி என் விளக்கில்,,,,??
கவியே கவியே பெண்ணே பெண்ணே..!!


அலைந்தேன் உந்தன் பின்னாலே....!!
இழந்தேன் மனதை தன்னாலே.....!!
தோன்றினாய் எந்தன் முன்னாலே....!!
ஆகினேன் கவிஞனாய் உன்னாலே....!!
அமுதே அமுதே பெண்ணே பெண்ணே..!!


உனக்காய் விரல்கள் கவி எழுதும்....,
உனக்காய் கைகள் பாட்டிசைக்கும்...,
உனக்காய் இதயம் கோட்டை கட்டும்...,
உனக்காய் ஜீவன் உயிர் கொடுக்கும்....,
அழகே அழகே பெண்ணே பெண்ணே..!!


மனதாலே உன்னை நெருங்குகிறேன்...,
உடலாலே தொலைவில் உறங்குகிறேன்...,
அழகாலே தலை சுற்றி கிறங்குகிறேன்....,,
உனை சேரவே இறைவனை வேண்டுகிறேன்,,,,!!

கனவே கனவே பெண்ணே பெண்ணே..!!


நீ கிறுக்கி எறிந்த காகிதங்கள்.......
அவை எனக்கே உரித்தான ஓவியங்கள்.....!!
உன் எச்சில் பட்டால் மருந்து...,
அது கூட எனக்கு ஆகும் விருந்து...!!


என் நாள்காட்டியோ உன் விடுமுறையைக் குறிக்கும்....
என் கடிகாரமுள்ளோ நீ வரும் திசை நோக்கி நிற்கும்....
என் கைப்பேசியோ உன் புகைப்படங்களைப் புரட்டும்....
என் ஹார்மோன்களோ உன் மனநிலை பிரதிபலிக்கும்....


நீ என் எண்ணங்களில் கவியை கட்டு அவிழ்கிறாய்....
நீ என் வண்ணங்களில் மழலையாய் பட்டு தவழ்கிறாய்....
உனை வர்ணிக்க வார்த்தை தேடிய என் அகராதியோ....
சொற்கள் இன்றி சொர்கம் வரை சென்று திரும்பியது.....!!


ஒருதலைக் காதல் அது,..
ஒரு சுகமான வலி
கட்டுப்பாடுகளற்ற கனவு
தடைபோடும் நிஐம்
இதயத்திற்கு இதமான பாரம்,..
என்றும் நீங்கா நினைவு...
எனக்கு மட்டுமல்ல உயிரே....
என் இதயத்தில் வாழும்
உனக்கும் தான்.......!!


காதலிப்போம்..!! காதலிக்கப்படுவோம்..!!


படித்ததற்கு நன்றி....

எழுதியவர் : ஸஹானா (29-May-19, 4:40 pm)
சேர்த்தது : Sahana
பார்வை : 449

மேலே