அன்னைத் தமிழைக் காப்போம்
தேன்கூட்டைக் கலைக்க நினைக்கிறது
தேளிலும் கொடூரமான நச்சுக் கரங்கள் !
மதவெறி அறியாத மானமிகு மனங்களை
நசுக்கத் துடிக்கிறது வஞ்சக நெஞ்சங்கள் !
இனவெறி இல்லாத இரக்க உள்ளங்களை
இரும்பான இதயங்கள் சீண்டிப் பார்க்குது !
சமதர்மம் காக்கும் சமதத்துவ மண்ணில்
சந்தர்ப்பம் தேடுது சமயத்தை நுழைத்திட !
சாதிமதம் மொழியை மறந்து வாழ்ந்திடும்
சகோதரத்துவ உறவை பிரிக்க நினைக்குது !
அன்பும் பண்பும் நிலைத்தத் தமிழகத்தை
அறநெறி பிறழ்ந்து அடக்கியாளத் துடிக்குது !
தித்திக்கும் தமிழை நிலையாக அழித்திட
திணிப்பைத் துவக்குது குறுக்கு வழியில் !
ஒற்றுமைக் காத்து ஓங்குபுகழ் தாய்மொழியை
எவரும் வீழ்த்திடா வகையில் காத்திடுவோம் !
பழனி குமார்