பெரும் தொல்லை

கவிதை கொண்டு உன்னை
அழைத்திட நான் கவிஞன் இல்லை//
எழுத்தின் வல்லமையால் உன்னை
ஈர்க்க புலவனும் இல்லை//

சித்திரத்தால் கவர்ந்து விட
ஓவியனும் இல்லை//
சிற்பத்தால் சிறைப் பிடிக்க
சிற்பியும் இல்லை//

சிறு கதையால் உன்னை
வளைத்துப் போட நாவல் ஆசிரியருமில்லை//
புன்னகையால் மயக்கிப் போட
புன்னகை அரசி
கே ஆர் விஜயாவும் இல்லை//

நிலவைச் சுற்றி வட்டமிடும்
நட்சத்திரம் போல் //
நினைவிலே உன் மேல்
காதல் கொண்டவை தான் பெரும் தொல்லை//

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Jul-19, 8:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : perum thollai
பார்வை : 115

மேலே