கிடைத்திடுமோ நிம்மதி

முல்லைப் பூ வாங்கப் போனேன்
மணவறையில் சூட //
முகம் மறைத்த படி ஓடி வந்தேன்
விழிகளில் நீர் ஓட//
பட்டாடை எடுத்து வைத்தேன்
மேனியை மூட //
தொட்டுக் களைய துணையில்லை
உள்ளத்திலே வேதனை வேகமாய்ப் பாட //
மஞ்சள் இட்ட வதனமும்
சோகத்தில் வாட/
வண்ணம் தீட்டிய இதழும்
சேர்ந்தே வாட/
துணைக்குத் துணையாய்
வந்திடுவேன் என்றவனோ
இன்னொரு பாதை தேட//
வேறு ஒருத்தியின் கழுத்திலே
பொன் தாலி கட்ட//
கண் எதிரே கண்ட கட்சியினாலே
என்னுயிர் ஊசல் ஆட//
இன்னும் எங்கே தான் நிம்மதியை
நான் தேட //