முதுமொழிக் காஞ்சி 84

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பிணிகிடந் தோன்பெற்ற வின்பநல் கூர்ந்தன்று. 4

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிணிபட்ட உடம்பை யுடையான் நுகரும் காமவின்பம் வறுமையுறும்.

'உடம்பை யுடையா னுகக்கும்' -பிரதி பேதம்.

வியாதியடைந்து மெலிந்த சரீரத்தை யுடையவன் நுகரும் காமவின்பம் வறுமையுடையதாம். உடல் நலத்தைக் கெடுக்கும். உயிரையும் மாய்க்கும்.

நோயாளி நுகரும் காமவின்பம் கேட்டைத் தருவதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-19, 10:40 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே