பாச உறவுகளுடன் களிகூர்வோம்

பார்த்து பழகாத தொலை தூரங்களை
அருங்கி அவர் அன்பிற்கு ஏங்குகிறோம்
விகற்பமாய் விலகி நிற்பவர்களை
விரும்பி நெருங்கி ஏற்கின்றோம்

கண்டும் காணாமல் செல்பவர்களின்
கண்களில் பட துடிக்கின்றோம்
நமைக் காணத்துடிக்கும் கண்களை
பாரா முகமாய் வெறுக்கின்றோம்

எங்கோ எவரோ நிகழ்த்திய சாதனையை
வரிந்துக்கட்டி வானளவு புகழ்கின்றோம்
அருகில் உள்ளவர்கள் திறமைகளை
பாராட்டி மகிழ மறுக்கின்றோம்

பாசாங்கு பச்சோந்திகளை
பாதையிலிருந்து விலக்குவோம்
பாசச் சொந்தங்களின்
வெற்றிகளில் களிக்கூர்வோம்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Jul-19, 9:14 am)
பார்வை : 68

மேலே