அன்று கொல்லும் அரசன் ஆணை

அரசன் அவசர விசாரணையில் அன்றே கொல்வான்....
தெய்வம் நின்று நிதானித்து நிகழ்வுகள் நீர்த்தப்பின் கொல்லும் ....
நீதிமன்றம் வாதம் பிரதிவாதம் என காலம் கடத்தி தண்டனை வழங்கும்....
அதற்குள்
அநீதி, அதர்மம், அராஜகம்
அடித்துத் துவைத்து
ஆதாரங்களை அழித்து
ஆணித்தரமாய் வெற்றிக் கொடி நாட்டிடும்.....

எழுதியவர் : வை.அமுதா (20-Jul-19, 9:11 am)
பார்வை : 58

மேலே