என்னவள்
கருப்பு நிலவெடுத்து கண்களிலே பதித்ததைப்போல் ..
கண்களின் நடுவினிலே சின்னதொரு கருவிழிகள் ....
நீ பார்க்கின்ற பார்வையிலே என்னுயிரை நான் தொலைத்தேன் ...
நீ சிரிக்கின்ற போது வானவில்லில் நான் மிதந்தேன் ...
நிலவுக்கும் உனக்கும் வேற்றுமைகள் பெரிதல்ல ..
இருந்தாலும் உன்னைவிட நிலவொன்றும் அழகல்ல ...
உன்னை பார்ப்பவர் மனமே பைத்தியம் ஆகிறதே ..
உன்னை படைத்தவன் நிலைமை கவலைக்கிடம்தானோ ...
- கலியுக பாரதி