ஆச்சி

ஆச்சி

என் அன்னைக்கு அன்னையாக
வந்தவளே.!!.
என்றைக்கும் என் மனதில் நிற்பவளே!!..
பத்து மாதம் என் தாய் என்னை வயிற்றினில் சுமந்திருந்தாள்..!!
பத்து வருடம் நீ என்னை உன் கைகளில் சுமந்திருந்தாய்..!!.
என் தாய்க்கு தாயாக பிறந்து.!!..
என் தாய்க்கும் மேலாக ஆனவளே..!!
வேலை பலுவில் என் தாயோ நிற்காமல் ஓட.!!
நித்தம் நான் கண்டது முப்பொழுதும் உன் முகம் தானே.!!.
நீ காட்டிய அன்பினில் திளைத்த நானோ
எண்ணிப் பார்க்கிறேன்.!!
பிறந்ததும் நான் அழைத்து அழுதது ஆச்சியோ என்று..!!!!!!!.

--- வேலைக்குச் செல்லும் அனைத்து தாயின் தாய்களுக்குச் சமர்ப்பணம்!!!!

எழுதியவர் : ராஜபுத்திரி (26-Jul-19, 11:17 pm)
சேர்த்தது : Rajaputhiri
Tanglish : aachi
பார்வை : 95

மேலே