சுவடுகள் பதிப்போம்

சுவடுகள் பதிப்போம்

இன்றைய பொழுது
நாளை வராது !
இன்முகம் கொண்டு
இனியது உரைத்திடு !
அன்பு காட்டிடு
உயிர்கள் அனைத்திலும்!
நன்மை செய்திடும்
நன்மனம் வேண்டும் !
இன்றே செய்திட
இயன்றிட வேண்டும் !
ஒருமுறை பிறப்போம்
ஒருமுறை இறப்போம் !
உலகினில் வாழ்ந்த
சுவடுகள் பதிப்போம் !

எழுதியவர் : கவி இராசன் (22-Aug-19, 11:44 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 208

மேலே