கண்ணன் பாட்டு கிருட்டின ஜெயந்தி முன்னிட்டு

மதுரம் ஆய்ப்பாடி கண்ணன் வதனம் மதுரம்
மாலவன் பவளச் செவ்வாய் மதுரம்
மதுரம் முகில்வண்ணன் வேய்ங்குழல் மதுரம்
மதுரம் குழலோசைத் தரும் கீதம் மதுரம்
மரகதவண்ணன் மயிர்ப்பீலி மதுரம் பாலன்
அவன் மேனியில் போர்த்திய மஞ்சள் பட்டும்
காதின் மகர குண்டலம் மதுரம் , மதுரம்
கால்களில் கலீர் கலீரென இன்னிசைதரும்
கழல்கள் மதுரம் மாயவன் மந்தகாசம் மதுரம்
கொண்டல்வண்ணன் திருடி வெண்ணை உண்ணும்
விதமே மதுரம் , அண்ணண் பலராமனுடன்
அனுஜன் இவன் களியாட்டங்கள் மதுரம்
மதுராதிபன் எம்மை ஆட்கொண்ட மாயோன்
இவனில் நான் காண்பதெல்லாம் மதுரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Aug-19, 4:06 pm)
பார்வை : 66

மேலே