கருப்பு ரோசா

அவனும் அவளும்
ஈருடல் ஓருயிரான காதலர்கள்
பிறர் கண்களுக்கு அவன்
கீழ் ஜாதி மகன், அவள்
உயர் ஜாதிப் பெண்
காதலர்கள் அவர்கள் இதற்கெல்லாம்
அப்பாற்பட்டவர்கள்
அவர்கள் காதல் மண மேடைப்போகும் மம்
இந்த'பிறரால்' அவர்கள் இருவரும்
அழிக்கப்பட்டு , ஒரே இடத்தில்
அவர்கள் பூத உடல் புதைக்கப்பட்டது
பத்தாம் நாள்……………..
அந்த கல்லறைமேல் …….
ஒரு ரோசா செடி thane அங்கு முளைத்த செடி
தாங்கிவந்தது இரு ' கருப்பு ரோசா' பூவை

அந்த ' பிறர்' இந்த ரோசா மலரையும் பிய்த்து
அழித்தனர் வெறி கொண்டு………
அழிக்க, அழிக்க அழிக்கமுடியா செடியை
கிள்ள கிள்ள தினமும் இரண்டே 'கருப்பு ரோசா;
மலர்ந்தது……..
துச்சாதனன்போல் ஓய்ந்துபோனார்
அந்த 'பிறர்' இப்போது

கல்லறைமேல் 'பூத்த ஆபூர்வ ரோசா' மலரை
மக்கள் ஓர் அறிய பொருளாய்க் காண
அங்கு வருகைத தருகிறார்கள் ………..

பூத்திருக்கும் கருப்பு ரோசா
அந்த ஆசை நிறைவேறா காதலர்களின்
ஆவியோ என்று அவ்வூரார் நம்புகின்றனர்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Aug-19, 2:37 pm)
பார்வை : 128

மேலே