பெய்தது மழை

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு
கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!
நெஞ்சங்கலங்கிய முகில்களும்
மின்னலாய் மிரட்டலிட!
காரிருளும் சூழ்ந்தது வானுலகை…
இனியும் தாமதித்தால் ஆபத்து
பயந்த வருணனும்!
பாய்ந்தோடி வந்தான் புவிமீது
சாரலாய் உனைக்காக்க…!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (16-Sep-19, 2:31 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : peithathu mazhai
பார்வை : 111

மேலே