சகாய டர்சியூஸ் பீ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சகாய டர்சியூஸ் பீ |
இடம் | : கன்னியாகுமரி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 2596 |
புள்ளி | : 92 |
எனது பெயர் சகாய டர்சியூஸ், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இராஜாக்கமங்கலம் துறை என்கிற அழகிய கடற்கரை கிராமம் எனது ஊர். படித்தது முதுகலை கணினி செயல்பாட்டியல். தற்போது தென் கொரியாவில் கணினித்துறையில் பணியாற்றிவருகிறேன் மேலும் தென்கொரிய தமிழ்ச் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளராகவும் இருந்து வருகின்றேன்.. தமிழ்மீது கொண்ட காதல் காரணமாக சில நேரங்களில் எண்ணங்களை கிறுக்குவது உண்டு. எனது யூடுப் இணைப்பு: https://www.youtube.com/channel/UC1H-DtGMZ2Ja0JYn26fZGIQ
அன்று
நீ நெருங்கி வர
படபடத்து
வெட்கம் அள்ளி
பூசிய இதயம்...
இன்று
நீ விலகிச் செல்ல
பதைபதைத்து
கண்ணீர் அள்ளி பூசுது...
காதல் கலைய
நோகும் மனம்
தேடும் தினம்
உன் அருகாமை...
உன்னால்
அநாதையான
உணர்வுகள்
கண்களில் வழிந்தோட
காதல் நனைந்த
பேனாவில்
சிந்தின
கவிதை துளிகள்!
வெண்சங்கு பூத்திருக்கும்
கடற்கரை
முத்தமிட ஆர்ப்பரிக்கும்
அலைகள்
துள்ளி விளையாடும்
சிறுமீன்கள்
மகிழ்ந்திருக்கும்
நாரைகள்
பசித்திருக்கும்
நீலக்கடல்
உணவாகும்
செந்தணல் பரிதி
பசிதனித்து
மேலெழும் நிலா
உள்ளம் அள்ளும்
மாலை
தனிமைக் காற்று
உடல் வாட்ட
உன்நினைவுகளை
போர்வையாக்கி
கரையோரம்
நீண்ட காத்திருப்பில்
உனக்காய் நான்!
வெண்சங்கு பூத்திருக்கும்
கடற்கரை
முத்தமிட ஆர்ப்பரிக்கும்
அலைகள்
துள்ளி விளையாடும்
சிறுமீன்கள்
மகிழ்ந்திருக்கும்
நாரைகள்
பசித்திருக்கும்
நீலக்கடல்
உணவாகும்
செந்தணல் பரிதி
பசிதனித்து
மேலெழும் நிலா
உள்ளம் அள்ளும்
மாலை
தனிமைக் காற்று
உடல் வாட்ட
உன்நினைவுகளை
போர்வையாக்கி
கரையோரம்
நீண்ட காத்திருப்பில்
உனக்காய் நான்!
காற்றிலாடும் கருங்குழல் கண்டு
நாணியோடும் கார்மேகங்கள்
உனைக் கண்ட சேதிசொல்ல...
மாரன் மயங்கும் மலர் கணைகள்
பிறக்கும் வேல் விழிகள்
காண விரைந்தோடி வந்தேன்...
பொன்னொளி வீசும் பொன்னணி
திலகம் தரித்த பிறைநுதல்
நெஞ்சை அள்ளிக்கொள்ள...
செவ்வான நிறமெடுத்து
தீந்தேன் தான்கலந்த செவ்விதழ்கள்
உணர்ச்சி பிழம்பை சோதிக்க...
கடலமிழ்தம் பொங்கும்
நங்கை மேனி
தாவி அணைத்தேன்...
தலையணை கையில்வர
கண்திறந்தேன்
வெறுமைக் கட்டில்..!
முகிலை
திறந்து
எட்டிப் பார்க்கும்
முழுமதி
கண்டேன்
சன்னலோரம் அதிசயம்
ஓரவிழிப் பார்வை
ஓரிரு நொடிகள்தான்
நிலவவள் வீசீனாள்
ஓராயிரம் செல்கள்
என்னுள்
வெடித்துச்சிதற
ஒற்றை செல்லாய்
முளைத்தாள்
இதயத்தில் அவள்!
கண்கள் பேசிட
எழுந்து வரும் காதலுக்கு
விழாவாம் இன்று
என்னில் என்னை
தின்று
விரைவாய் வளரும்
அன்பானவளுக்கு
இதயம் திறந்து
சில வரிகள்
உன் விழிகள்
என் கவிதையின்
திறவுகோல்...
உன் இதழின் சிரிப்பு
என் மகிழ்ச்சியின்
அளவுகோல்...
உன் அணைப்பு
என் நிம்மதியின்
உறைவிடம்...
உனக்கும் எனக்கும்
உண்டு வாழ்வில்
ஓராயிரம் வேறுபாடுகள்
இருவேறு துருவங்கள்
ஈர்க்கும் விசை அதிகமாம்
உண்மை....
உன் ஒவ்வொரு
அசைவிலும்
அறிகிறேன் நான்...
உன் கோபத்தில்
விட்டுக்கொடுப்பில்
மௌனத்தில்
அனைத்திலும்
காதல்...
வாழ்கிறேன் நான்!
என் இளமைகால
தேடலில்
அறியவில்லை உன்னை...
இன்
அதிகாலை நேரம்
அருவியின் ஓரம்
இயற்கையின் அழகை
பருகியபடி நான்!
பொன்னொளி தீண்டி
வெண்பட்டு திரைவிலக
கண்பரிக்கும் நீரோடை
சலசலத்து நல்லிசைமீட்ட
கார்வண்ண குயில்பாட
கோலவண்ண மயிலாட
குளிர்தென்றல் கரம்நீட்ட
நறுமலர்கூட்டம் சேர்ந்தாட
கள்ளுண்டதேனீ புதுமலரோ?
என்றெண்ணி ரீங்காரமிட
கண்ணாடிஊற்றுக்கள் பனித்தூவ
கனிதரும்மரங்கள் வரவேற்க
மகிழ்ச்சித் திரளொன்று மனதோடு
உடைபட அனிச்சையாய் திரும்பினேன்...
அடிமேல் அடிவைத்து புதிதாய்
நடைபயிலும் அன்னமென
பேரழகின் சொந்தமென
அசைந்து அருகில் வந்தாள்...
கண்டதும் இதயத்தில்
காதல் அருவி!
பித்தமது தலைக்கு போனால்
மொத்த உடலும் ஆடுதடா
சித்தம் அது கலங்கிப் போனால்
பைத்தியமாய் ஆகுதடா
சேர்த்த பணம் எதுவானாலும்
காகிதமாய் தெரியுதடா
மனைவி பிள்ளை யார் என்றாலும்
மாயமென தெரியுதடா
சொத்து வீடு எதுவென்றாலும்
சோகத்தையே தருகுதடா
சொந்த பந்தத்தைப் பார்க்கும்போது
உடல் முழுதும் எரியுதடா
வயிறது பசிக்கும் போது
உயிரின் உணர்வு தெரியுதடா
கொள்ளும்வரை உண்ண போது
கொல்லும் எண்ணம் தோன்றுதடா
நயவஞ்சகம் தோன்றுதடா
நல்ல உள்ளம் மாறுதடா
வெல்லமான மனதுக்குள்ளே
கள்ள எண்ணம் தோன்றுதடா
சுற்றத்தார் பேசும் பேச்சு
கற்ற வித்தையை மாற்றுதடா
காலனை அழைக்கும் வண்ணம் - மனம்
கடுமையாக மாறுதடா
- - - - -
அவள் தந்தாள் காதல்
அவளின் உளறல் தந்தது
கவிதை!
வாழ்க்கை அழகானது..!
நட்பு சாமரம் வீசிய
கயவர்கள்
மனம் சிதறிய போதும்..!
இரட்டை நாக்கு
வேடதாரிகள்
இதயம் கிழிந்த போதும்..!
நயவஞ்சகரின்
துரோகங்கள்
நெஞ்சம் சிதைந்த போதும்..!
துன்பங்கள் கார்முகிலாய்
சூழ்ந்த போதும்..!
துவளாதே..!
வாழ்க்கை அழகானது..!
மேகங்களின் மோதல்
பிறக்கும்
இருளை கிழிக்கும் மின்னல் கீற்று..!
துன்பங்களுடன் மோதிப்பார்
பிறக்கும்
நம்பிக்கை ஒளிக்கீற்று..!
இரவு இருளை அள்ளி
பூசியதினால்தானே..!
அந்த நிலமகளே அழகு..!
நீயும் நம்பிக்கைதனை அள்ளி
பூசிப்பார் துவண்டுபோன
வாழ்க்கை அழகாய் தெரியும்..!
ஆயிரம் நிலவொளிகளா தேவை
காரிருளை கடக்க...?
ச
நண்பர்கள் (5)

மாறன் வைரமுத்து
திருவனந்தபுரம்

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

BARATHRAJ M
SALEM
