சகாய டர்சியூஸ் பீ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சகாய டர்சியூஸ் பீ |
இடம் | : கன்னியாகுமரி, தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2019 |
பார்த்தவர்கள் | : 3471 |
புள்ளி | : 103 |
எனது பெயர் சகாய டர்சியூஸ், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இராஜாக்கமங்கலம் துறை என்கிற அழகிய கடற்கரை கிராமம் எனது ஊர். படித்தது முதுகலை கணினி செயல்பாட்டியல். தற்போது தென் கொரியாவில் கணினித்துறையில் பணியாற்றிவருகிறேன் மேலும் தென்கொரிய தமிழ்ச் சங்கத்தின் தகவல் தொடர்பு செயலாளராகவும் இருந்து வருகின்றேன்.. தமிழ்மீது கொண்ட காதல் காரணமாக சில நேரங்களில் எண்ணங்களை கிறுக்குவது உண்டு. எனது யூடுப் இணைப்பு: https://www.youtube.com/channel/UC1H-DtGMZ2Ja0JYn26fZGIQ
இருள் தழுவும் இரவு
எழுந்து வரும் நிலவு
கிசுகிசுத்தபடி
நகரும் வான்மீன்கள்
தெளிவற்ற பாதை
பதற்றமான பயணம்
உடன் வரும் நீ!
மனம் மயக்கும்
மெல்லிசையாய்
வாடை முகம்
தழுவினாலும்...
துடிக்கும் என்னிதயத்தின்
ஆழத்தில்
ஏனோ வெறுமை..!
உன் தோளில்
சாய்கிறேன்...
உள்ளத்தின் காட்சிகள்
விழிவழி காண...
என் தேடலின்
அர்த்தம்
உணரச் செய்கிறாய்..!
உன் வலிமை கொண்டு
என் உடைந்த
இதய பாகங்களை
சரி செய்கிறாய்...!
இரணங்களை
கணங்களில்
மறைக்கிறாய்...!
எனை மீட்டு
புது வெளிச்சம்
பாய்ச்சும் பாதைகளை...
கண்முன்
விரியச் செய்கிறாய்..!
உடன் உலா வரும்
என் இனிய தனிமையே..!
விழி மோதலில்
தொலைந்து போனது
இதயம்...
முகவரி கேட்டு
மாற்றாக அனுப்பிடு
உன் இதயத்தை...
காத்திருக்கிறேன்!
இதயத்தில் இடம்தானே கேட்டேன்!
ரஷ்யா கண்ட உக்ரைன் போல்
போர் எதற்கு?
மென்மையான
முத்தத்தின் சத்தத்தில்...
இரு மனங்களின்
ஏக்கங்கள் தீரும்
உன்னத உலகத்தில்...
உன் வருகைக்காய்
காத்திருக்கும் நான்!
பின்னிப் பிணைய
ஏங்கி இருக்கும்
காலம் பிரித்த....
இரு இதயங்களின்
வருகையை...
கண்சிமிட்டியபடி பார்த்திருக்கும்
நட்சத்திர கூட்டங்கள்!
உன்வாசனை சுமந்த
காற்று என்முகமருகே
நடனமாடி கிசுகிசுக்க
கண்மூடுகிறேன்....
நினைவின் அணைப்பில்
உன்அன்பின் கதகதப்பு...
கரைகிறது மணித்துளிகள்!
தூரத்தில் நிலவாய்
நீ ஓடிவர...
வறண்ட என்னிதயத்தில்
அன்பின் நீர் ஊற்றேடுப்பு...
பாய்ந்துவரும் காதலில்
விழியோரம் சிறுதுளி
எட்டிப் பார்க்கிறது!
கைகளில
இதயத்தில் இடம்தானே கேட்டேன்!
ரஷ்யா கண்ட உக்ரைன் போல்
போர் எதற்கு?
விழி மோதலில்
தொலைந்து போனது
இதயம்...
முகவரி கேட்டு
மாற்றாக அனுப்பிடு
உன் இதயத்தை...
காத்திருக்கிறேன்!
இன்பம் கொடுக்கும்
இனிய தீபஒளி
திருநாள் இன்று
இந் நன்னாளில்
இல்லங்கள் தோறும்
இனிக்கும் இனிப்புகள்
இதயங்களில் அன்பின்
சுவையினை பரிமாறட்டும்!
விண்ணில் சீரும் பட்டாசுகள்
மதம்பிடித்த பதர்களின் உள்ளத்தை
சிதறும் மனிதமெனும்
நெருப்பால் பொசுக்கட்டும்!
எத்திசையும் பாய்ந்து வரும்
தீபஒளிக் கீற்றுகள்
சாதி அறுத்து
சமூக இருள் போக்கட்டும்!
புறத்தே
புத்தாடை உடுத்தி
புதுஅலங்காரம் காணும்
மனித மனங்கள்
அகத்தே
இருள் நீங்க
சமத்துவ ஒளியேந்தி
புத்துலகம் படைக்கட்டும்!
அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!
கற்பனையில் எழுதா காவியம்
தூரிகையில் வரையா ஓவியம்
சிற்பத்தில் காணா அழகியல்
என் விழிகளின் தேடலில்
இதயத்தில் விழ
எழுந்தாள் காதலாய் ...
நிலவின் ஒளியில்
தோளில் முகம் சாய்த்து
கைவிரல் பிடித்து கடற்மணலில்
அவள் வரைந்த வரிகள்
இதயத்தில் கல்வெட்டாக...
வாடையின் குளுமையில்
காதோரம் அவள் படித்த
வார்த்தைகள்
நெஞ்சை அள்ளித்
தின்னும் இலக்கியமாக....
உதடும் உதடும் உண்ணாது
இமைப்பொழுதில்
பதிந்த அவளின் முத்தங்கள்
நரம்பினில் பாய்ந்து உணர்வில் புகுந்து
என்னுயிரோடு அவளை பிணைக்க...
ஆர்கலி எண்ணங்கள்
அவளின் நீச்சல் குளமாக
பொங்கி எழும்
காதல் அலைகள்
காகிதங்களை ந
வெண்சங்கு பூத்திருக்கும்
கடற்கரை
முத்தமிட ஆர்ப்பரிக்கும்
அலைகள்
துள்ளி விளையாடும்
சிறுமீன்கள்
மகிழ்ந்திருக்கும்
நாரைகள்
பசித்திருக்கும்
நீலக்கடல்
உணவாகும்
செந்தணல் பரிதி
பசிதனித்து
மேலெழும் நிலா
உள்ளம் அள்ளும்
மாலை
தனிமைக் காற்று
உடல் வாட்ட
உன்நினைவுகளை
போர்வையாக்கி
கரையோரம்
நீண்ட காத்திருப்பில்
உனக்காய் நான்!
வாழ்க்கை அழகானது..!
நட்பு சாமரம் வீசிய
கயவர்கள்
மனம் சிதறிய போதும்..!
இரட்டை நாக்கு
வேடதாரிகள்
இதயம் கிழிந்த போதும்..!
நயவஞ்சகரின்
துரோகங்கள்
நெஞ்சம் சிதைந்த போதும்..!
துன்பங்கள் கார்முகிலாய்
சூழ்ந்த போதும்..!
துவளாதே..!
வாழ்க்கை அழகானது..!
மேகங்களின் மோதல்
பிறக்கும்
இருளை கிழிக்கும் மின்னல் கீற்று..!
துன்பங்களுடன் மோதிப்பார்
பிறக்கும்
நம்பிக்கை ஒளிக்கீற்று..!
இரவு இருளை அள்ளி
பூசியதினால்தானே..!
அந்த நிலமகளே அழகு..!
நீயும் நம்பிக்கைதனை அள்ளி
பூசிப்பார் துவண்டுபோன
வாழ்க்கை அழகாய் தெரியும்..!
ஆயிரம் நிலவொளிகளா தேவை
காரிருளை கடக்க...?
ச