அவள் வருவாளா

எங்கிருந்து வந்தால் எப்போது வந்தாள்
ஏன் வந்தாள் இங்கு என்பதெல்லாம் நான்
அறியேன் , கண் மூடி கண் திறந்து நான்
பார்க்கையிலே என் முன்னே நிற்கின்றாள்
அவள், புன்னகைத்து, புன்னகையில்
என்னை ஆட்கொண்டாள் என் மனதையும் திருடிவிட்டாள்
அவள் தந்த பார்வை மதியின் ஒளியாய்
என் மனதில் ஊடுருவி காதல் வெள்ளம்
பெருக்கி சென்றது ….. என் காதலை அவளுக்கு
தெரிவிக்க நான் மீண்டும் அவளை பார்க்க நினைக்க
அவள் காணாமல் போய்விட்டாள் என்னுளத்தில்
காதல் சேர்த்தப்பின், என்னுள்ளத்தையும் திருடியவள்,
எங்கு சென்றாளோ...… மீண்டும் எப்போது வருவாள்
மாது .என்னுள்ளத்தை என்னிடம் தந்திட, அதில்
அவள் காதல் முதிரைப் பதித்து …..நான் மகிழ
வருவாளா, அவள் வருவாளா என்னுள்ளம்
திருடிய திருடி அவள் வருவாளா...…….!!!!!!!!

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Sep-19, 3:43 pm)
பார்வை : 164

மேலே