முற்றிலுமாய் விலகிவிட்டேன்- சகி
[முகவரி தெரியாதவர்களிடம்
முகமறியாத அவர்களிடம்
உறவாட உன்னால் முடிகிறது....
உன்னைத் தவிர
முகம் அறியாதவர்களிடம்...
முகவரி அறியாதவர்களிடம்
என்னால் உறவாட முடியாது....
உன் சந்தோஷம்
அடுத்தவர்களிடம்
உறவாடுவது என்றால்
முழுமனதோடு நான்
விலகி நிற்கிறேன்...
விலகிவிட்டேன்......
நிரந்தரமாய் இன்று....#வாழ்க்கை வலிகள்]