காதல்

உன்னைப் பார்த்தது முதல்
உன் நினைவே , உன்நினைவிலேயே
உறங்கிவிட்டேன் , கனவில் நான்
உன்னையே கண்டேன் , என்னை
நீ தழுவி அனைத்து முத்தம் தந்தாய்
என்னை மறந்தேன் மோஹன உன்
புன்முறுவல் என்னை இன்ப லோக
எல்லைக்கு ஏந்தி சென்றது....
இது என்ன கனவா நெனவா என்று
கனவிலேயே யோசித்தபோது கனவு
களைய , கண் விழித்து பார்த்தேன்
என் முன்னே நீ ....... அதே, கனவில்
நான் கண்ட அந்த மோகன புன்முறுவலுடன்...
இது என்ன கனவா நெனவா
மீண்டும் கண் கசக்கி பார்த்தேன்
உயிர்கொண்ட சித்திர பாவையாய் நீ......
என்னை மறந்தேன் மீண்டும் நான்
அப்போது நீ என் பின்னே வந்து
என் கண்களை மூட ......கண்ணாமூச்சி
ஆட்டம் தொடக்கி வைத்தாய் நீ
ஆட்டம் முடிய என் மடியில் நீ .......
முடியாத காதலை மங்கலமாய் முடித்திட இன்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Oct-19, 10:51 am)
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே