குறுந்தொகை குறிஞ்சித்திணை 142 வது பாடல்

பாடல் காட்சி



இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்









தோழியிடம் தலைவன் கூறுவதாக வருவது , அதிகம் வராத காட்சியாக இருக்கிறது , இந்தப் பாட்டில் வருகிறது , தொடர்ந்து படித்தால் மற்ற பாட்டுகளில் வரலாம்





இப்படலை எழுதியவர் : கபிலர்





விளக்கம்

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,

புனக் கிளி கடியும் பூங் கட் பேதை

தான் அறிந்தன்றோ இலளே-பானாள்

பள்ளி யானையின் உயிர்த்து, என்

உள்ளம், பின்னும், தன் உழையதுவே!



நாலாவது வரியில் இருந்து இந்த பாட்டை பார்ப்போம்



பானாள் பள்ளி யானையின் உயிர்த்து -



பானாள் - நடு யாமத்துப்

பள்ளி யானையின் - படுத்துத் துயிலுதலையுடைய யானையைப் போலப்

உயிர்த்து - பெருமூச்சு விட்டுக்கொண்டு



என் உள்ளம், பின்னும், தன் உழையதுவே

என் உள்ளம் - எனது நெஞ்சம்,

பின்னும் - நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும்

தன் உழையதுவே - அவளிடத்திலே இருக்கின்றது; தலைவி கிட்ட இருக்கிறது



அந்த தலைவி எப்படி பட்டவங்கனு விளக்கறாங்க பாருங்க



சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,



சுனைப்பூக் குற்றுத் - சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து,



தொடலை தைஇ - - மாலையைக் கட்டி



புனக் கிளி கடியும் பூங் கட் பேதை



புனக் கிளி கடியும் -

புனம் - மலையில் இருக்கிற கொல்லை , தோட்டம்,

கிளி கடியும் -கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை ஓட்டுகின்ற ,



பூங் கட் பேதை

பூவைப் போன்ற கண்ணையுடைய பேதையாகிய அத்தலைவி



தான் அறிந்தன்றோ இலளே -



இதனை அறிந்தாளோ இல்லையோ!

என் மனது யானை மாதிரி அவள் இருக்குமிடத்திலயே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா , தெரியாதா , அப்படினு தோழிகிட்ட குறை சொல்வதுதான் இந்தப் பாடல்



பாடல் மறுபடியும்



சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,

புனக் கிளி கடியும் பூங் கட் பேதை

தான் அறிந்தன்றோ இலளே-பானாள்

பள்ளி யானையின் உயிர்த்து, என்

உள்ளம், பின்னும், தன் உழையதுவே!

எழுதியவர் : பாவி (4-Oct-19, 9:57 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 577

மேலே