இதயங்களுக்கு உண்டு வாசம்
கார்த்திகேயன்... நீ ஒரு
நேர்த்திகேயன்...
கார்த்தியின் செயல்களின்
நேர்த்தியில்.. அழகில்...
நந்தவனங்களும் பூவனங்களும்
குறிப்பெடுத்துக் கொள்ளும்
மேலும் தம்மை
மெருகேற்றிக் கொள்ள...
கார்த்தியோடு உரையாடினால்...
அது... தேனருவிக் குளிர்தென்றல்
சந்தனவனம் கடந்து
மலர்ப்பொய்கை நுழைந்து
பசும்புல்வெளி தவழ்ந்து...
வீசினாற் போன்று
செவிக்குணவு தேனாகும்...
கருத்துச்செறிவு களைகட்டும்...
மாரீஸ்வரி... தங்கை இவள்
அன்பை மாரியாய்ப்
பொழிவதில் பல படி...
தமிழும் ஆங்கிலமும்
தங்கைக்கு அத்துபடி
அதை சொல்லியாக வேண்டும்
இங்கு உள்ளதை உள்ளபடி...
இனிய காவியத்தின்
தலைவன்.. தலைவி...
திருவாளர் & திருமதி
கார்த்திகேயன் & மாரீஸ்வரி
அன்புத் தம்பதியருக்கு
திருமண நாள் வாழ்த்துக்கள்...
வாழ்க பல்லாண்டு
வளங்கள் எல்லாம் பெற்று...
அன்போடும் அறனோடும்
பண்போடும் பயனோடும்
எழுதப்படும் இனிய
இல்லற காவியத்தின்
வயது பதினேழு ஆண்டுகள்...
அது தாண்டட்டும்
நூறாண்டுகள்...
தனக்கென்று வாழ்வது கொஞ்சம்
துணைக்கென்று வாழும் நெஞ்சம்
என வாழும் தம்பதியர்
கார்த்திகேயன்... மாரீஸ்வரி
தங்களின் அன்பு ராஜாங்கத்தில்
வானமும் வசப்படட்டும்..
வசந்தங்கள் வரமாகட்டும்...
திரும்புகிற திக்கெல்லாம்
சுகந்தம் சுகம் தரட்டும்...
ஏழு ஸ்வரங்களாய்
மகிழ்ச்சி... இசை பாடட்டும்...
தந்தையின் சதாபிஷேகத்தில்
தனயனின் திருமண நாள்...
எட்டு ஒன்பது இரண்டாயிரத்து
பத்தொன்பது... என்றும்
எட்டட்டும்... ஆயிரமாயிரம்
வெற்றிகள் உள்ளன்போடு...
நீவிர் நல்ல மனதுக்கு
சொந்தக்காரர்...
உமை வாழ்த்துகையில்
உள்ளம் உவகை கொள்கிறது...
எழுத்துக்கள் எல்லாம்
உமைப்போன்றோரை
வாழ்த்துவதற்கு பிறந்தனவோ...
இதயங்கள் எழுதும்
மெல்லிய உணர்வில்
பூக்கும் கவிதைகளெல்லாம்
இதய வாசல்களின்
வண்ணக் கோலங்கள்...
இன்றும் என்றும்
அது தொடரட்டும்...
பூக்களுக்கு மட்டுமல்ல
இதயங்களுக்கும்
வாசம் உண்டு.. எனக்
கண்டு தெளிந்த
திருமண நாள் இது...
வசந்தங்கள் தொட்டு
நாட்கள் நகரட்டும்...
வாழ்த்துக்களோடு...
அன்பர்கள்...
ஆர். சுந்தரராஜன்...
😀👍🙏🌹💐👏