என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 4

நேரிசை வெண்பா

படிச்சிட்டு தர்றேன்னு பாவிப் பசங்க
அடிச்சிட்டுப் போறா னுகளே! - முடிச்சிட்டுப்
பொத்திவைக்க வாமுடியும் புஸ்தகத்தை? ஞானத்தை
ஒத்திவைக்க வாமுடியும் ஓய்? 7

பாஞ்சாலி யோடவர்ணப் பஞ்சுத் துணிங்கதான்
மேஞ்சிடும் வண்ணத்துப் பூச்சியாச்சாம்! - எஞ்சாமி
தோள்மேல்நம் எம்எல்ஏத் துண்டின் வரலாறு?
தாள்மேல் எழுதறதே தப்பு! 8 - ஆசிரியர் சேஷாசலம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Oct-19, 6:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 54

மேலே