எ முதல் எழுத்துக் கவிதை

#தலைப்பு (அறிவுரை)

எள்ளானாலும் பகிர்ந்துண்டு
உள்ளம் மகிழ்ந்திடு/
எடுப்பார் கைப்பிள்ளை
வாழ்க்கை வாழ்ந்திடாதே/

எளிய பிறப்பானாலும்
வலிமை இழக்காதே/
எந்தச் சூழ்நிலையிலும்
திருடனாக உலாவிடாதே /

எதிரிக்கும் உயிர்
காக்கா உதவிடு/
எடுக்கும் காரியத்தை
சிறப்பாய் முடித்திடு/

எரிக்கும் சொற்கள்
கேட்டு தயங்கிடாதே /
எப்போதும் தமிழ்
உரைத்திட மறந்திடாதே/

எவ்வலியானாலும் நேர்வழிப்
பாதை நோக்கிடு/
எங்கு சென்றாலும் அன்னையிடம் மறைத்திடாதே/

தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (19-Oct-19, 9:18 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 137

மேலே