உயிருடன் எழுந்து வா

வறண்டு விட்ட தோல் போன்று
பிளந்து கிடக்கும் நிலங்கள்
நீரற்ற ஆழ்துளயை
நிரப்பி மூடவும் திராணியற்ற
உழவர் நிலை

நிலத்தை தவிர வேறொன்றும் அறியாத
குடும்பத்தின் மைந்தன்
நடக்க கற்றுக் கொண்டு
ஓடி விளையாடுகிரான்
ஆழ்துளைகள் நிறைந்த பரந்த வெளிகளில்

பசியுடன் காத்திருக்கும் பச்சோந்தி போல்
உள்ளிழுத்துக் கொண்டதே மண்ணின் மைந்தனை
ஆழத்தில் அமிழ்ந்து கிடக்கிறான் சுஜித்
இயங்குகின்றன மீட்ப்புப் பணியில்
இரவு பகலாக இயந்திரங்கள்

நேற்று பலர், இன்று சுஜித்
நானும் வேண்டிகிறேன் இறைவனிடம்
மீட்டளிப்பாய் பாலகனை பரிதவிக்கும் பெற்றோரிடம்
உயிரற்ற ஆழ்துளைகளை துரிதே மூடிடுவோம்
மாசற்ற உயிர்களை முன்நின்று காத்திடுவோம்!

சம்பத் குமார்

எழுதியவர் : சம்பத், கல்கத்தா (28-Oct-19, 6:46 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 81

மேலே