தனிமை

கடலோடு மையல் கொள்ள!
கதிரவனும் சென்றுவிட்டான்…
விண்ணோடு கொஞ்சி விளையாட!
மதியும் தோன்றிவிட்டாள்…
நானோ! தனிமையில்…
தனிமை கொடியது என்றார்கள்!
எவ்வளவு உண்மை!
உணர்கிறேன் இன்று முழுமையாய்…

மணலில் உன் பெயரை
எழுதியே ஓய்ந்து போனதடி
என் விரல்கள்!
நீ அருகில் இருப்பதாய்
எண்ணி எனக்குள்ளே பேசிய
வார்த்தைகள் மனதினை அழுத்த
உன் நினைவுகளால் துவண்ட
என் இதயமோ
பாரம் தாங்காமல் விம்மி துடிக்க!
விழியோரம் நீரும் இன்று புதிதாய்!!!

தோளோடு தோள் சாய்ந்து!
விழியோடு விழி கலந்து!
உயிர் நோக உனை அணைத்து!
மடிமீது என் தலை சாய்த்து!
அழ வேண்டுமடி
உயிர் வலி நீங்க!
ஏங்கி காத்திருக்கிறேன்!
உன் அருகாமைக்காய்…

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (18-Nov-19, 7:12 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : thanimai
பார்வை : 5030

மேலே