முதல் எழுத்துக் கவிதை சொ தலைப்பு சொல்வேந்தன்
சொற்களை செம்மையாய் நீ
உரைத்து/
சொல்லுக்குள் நற் பொருளைத்
திணித்து/
சொல்லுக்கும் வலிமை
இருப்பதைப் புரிந்து/
சொல்லிலே நேர்மையை
எப்போதும் வகுத்து/
சொர்க்க வைக்கும் பேச்சினை
வளர்த்து/
சொன்ன வாக்குகளை மறவாமல்
காத்து/
சொந்தக் கற்பனையில்
கவிதைகளைப் புனைந்து/
சொற்தொடரிலும் பாடல்களிலும்
புதுமையை இணைத்து/
சொல்லாத சொல்லாடல்களை
அதற்குள்ளே புகுத்திடு/
சொல் வேந்தனாகவே எந்நாளும்
வாழ்ந்திடு/
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
