முதல் எழுத்துக் கவிதை சொ தலைப்பு சொல்வேந்தன்

சொற்களை செம்மையாய் நீ
உரைத்து/
சொல்லுக்குள் நற் பொருளைத்
திணித்து/

சொல்லுக்கும் வலிமை
இருப்பதைப் புரிந்து/
சொல்லிலே நேர்மையை
எப்போதும் வகுத்து/

சொர்க்க வைக்கும் பேச்சினை
வளர்த்து/
சொன்ன வாக்குகளை மறவாமல்
காத்து/

சொந்தக் கற்பனையில்
கவிதைகளைப் புனைந்து/
சொற்தொடரிலும் பாடல்களிலும்
புதுமையை இணைத்து/

சொல்லாத சொல்லாடல்களை
அதற்குள்ளே புகுத்திடு/
சொல் வேந்தனாகவே எந்நாளும்
வாழ்ந்திடு/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (26-Nov-19, 11:18 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 76

மேலே