நதி தீரத்திலே அலை பாயுது மனது காதல் கீதத்திலே

தீரத்திலே நதி தீரத்திலே
அலை பாயுது மனது காதல் கீதத்திலே !

வீரத்திலே போர் வீரத்திலே
புதுநானூற்று பெருமை விம்முது நெஞ்சினிலே !

கவிதையிலே தமிழ்க் கவிதையிலே
கம்பனின் காவியம் விரியுது வரிகளிலே !

தென்றலிலே இளவேனில் தென்றலிலே
புன்னகை அலை வீசுது அவளிதழினிலே !

கனவிலே துயில் கனவினில்
பொழில் மலராய் விரிகிறாளவள் அழகினிலே

தமிழினிலே அமுதத் தமிழினிலே
இவை தினம் மலருது எழுத்தினிலே !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Nov-19, 9:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 108

மேலே