நதி தீரத்திலே அலை பாயுது மனது காதல் கீதத்திலே
தீரத்திலே நதி தீரத்திலே
அலை பாயுது மனது காதல் கீதத்திலே !
வீரத்திலே போர் வீரத்திலே
புதுநானூற்று பெருமை விம்முது நெஞ்சினிலே !
கவிதையிலே தமிழ்க் கவிதையிலே
கம்பனின் காவியம் விரியுது வரிகளிலே !
தென்றலிலே இளவேனில் தென்றலிலே
புன்னகை அலை வீசுது அவளிதழினிலே !
கனவிலே துயில் கனவினில்
பொழில் மலராய் விரிகிறாளவள் அழகினிலே
தமிழினிலே அமுதத் தமிழினிலே
இவை தினம் மலருது எழுத்தினிலே !