தடம் மாறும் தளிர்கள்

பிறப்பிலும் வளர்ப்பிலும் பெற்றவர்களிடம் குறையில்லை.
அறிவிலும் ஊக்கத்திலும்
பிள்ளையிடம் குறையில்லை.
படிப்பிலும் திறமையிலும்
நிறைகுடமான பிள்ளை.
அன்பிலும் பண்பிலும்
கோபுரமான கிள்ளை.
தனக்கான சுதந்திரம் தேடிடும் வேளை.


பாதையை மாற்றும் நண்பர்கள்
பழக்கம் .
போதை ஏற்றும் தோழியர்
நெருக்கம்.
ஆசையைக் கூட்டிடும் பருவ
மாற்றமும்.
அகந்தையை வளர்க்கும் வயதின் ஏற்றமும்.
தாயின் பாசத்தை நெஞ்சில்
கரைக்கும் .
தந்தையின் அறிவுரையை ஏற்றுக்க மறுக்கும்.


கிளை பற்றாக் கொடியும்
சொல் கேளாப் பிள்ளையும்
பலன் அளிப்பதில்லை.
இணைய தளமும் சினிமாவும் கொள்ளியிடும்
வாழ்க்கை இளமையிலே கருகிய பின்னே .
நினைத்துக் கதறுவதால் பயனில்லை கண்ணே.

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (29-Nov-19, 7:54 pm)
பார்வை : 476

மேலே