அரசியல்

அகல்வெளியில் ஒளி பரப்பிய பகலவனே
நம்மவரின் மனவெளியில் ஒளியேற்ற மறந்தாயோ!
நாச்சுவை அறிந்து வயிற்றுக்குத் துரோகமிழைக்கும்
குறைகளால் நிரம்பும் அரசியல் - அதனால்
பிழைப்புக்கே ஏங்கும் மக்களின் வாழ்வியல் .

சிலம்பு உரைக்கும் அரசியலோ கடந்துபோனது
சுரண்டித் தின்னும் தலைகளே ஓங்கிநின்றது
அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகுமன்று
அரசியல் குதித்தோர்க்கு பணம் கையூட்டாகும்
நாம் கேள்விக் கட்டுகளை எறிவோமாயின்
அவர்கள் வேள்வித்தீயில் வெந்து போவர்.

எழுதியவர் : கார்த்திக் ரத்தினவேல் (4-Dec-19, 12:12 pm)
பார்வை : 2418

மேலே