தமிழ் மொழியும் ஓரெழுத்து சொற்களும்
தமிழ் மொழியில் எத்தனையோ ஓரெழுத்து சொற்கள் இருக்கிறன்றன . தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன . இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன . அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தர கூடியவை . அவற்றை இங்கே தெரிந்து கொள்வோம் .
அ -- எட்டு
ஆ --பசு
ஈ --கொடு , பறக்கும் பூச்சி
உ -- சிவன்
ஊ--தசை , இறைச்சி
ஏ -- அம்பு
ஐ-- ஐந்து, அழகு , தலைவன் , வியப்பு
ஒ --வினா , மதகு , நீர் தாங்கும் பலகை
கா --சோலை ,காத்தல்
கூ --பூமி , கூவுதல்
கை-- கரம் , உறுப்பு
கோ --அரசன் , தலைவன் , இறைவன்
சா -- இறப்பு , மரணம் , பேய் , சாதல்
சீ -- இகழ்ச்சி ,திருமகள்
சே --எருது , அழிஞ்சில் மரம்
சோ -- மதில்
தா --கொடு , கேட்பது
தீ -- நெருப்பு
து --கேடு ,உண், பிரிவு , உணவு ,பறவை இறகு
தூ --வெண்மை ,தூய்மை
தே-- நாயகன் , தெய்வம்
தை --மாதம்
நா -- நாக்கு
நீ -- நின்னை
நே --அன்பு ,நேயம்
நை --வருந்து ,நைதல்
நொ-- நொண்டி , துன்பம்
நோ--நோவு , வருத்தம்
நௌ--மரக்கலம்
பா --பாட்டு ,நிழல் ,அழகு
பூ -- மலர்
பே-- மேகம் ,நுரை, அழகு
பை-- பாம்புப் படம் ,பசுமை , உறை
போ --செல்
மா -- மாமரம் ,பெரிய விலங்கு
மீ -- வானம் , மேலே , உயரம்
மு -- மூப்பு
மூ -- மூன்று
மே -- மேல் , மேன்மை
மை -- அஞ்சனம் ,கண்மை . இருள்
மோ -- முகர்தல், மோதல்
யா --அகலம் .மரம்
வா --அழைத்தல்
வீ --பறவை , பூ ,அழகு
வௌ -- கெளவுதல் , கொள்ளை அடித்தல் .
இன்னும் வரும் . அள்ள அள்ள குறைவது அல்ல அல்ல எம் தமிழ் மொழி !