தமிழ் மொழியும் ஓரெழுத்து சொற்களும்

தமிழ் மொழியில் எத்தனையோ ஓரெழுத்து சொற்கள் இருக்கிறன்றன . தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன . இவற்றில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன . அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தர கூடியவை . அவற்றை இங்கே தெரிந்து கொள்வோம் .

அ -- எட்டு

ஆ --பசு

ஈ --கொடு , பறக்கும் பூச்சி

உ -- சிவன்

ஊ--தசை , இறைச்சி

ஏ -- அம்பு

ஐ-- ஐந்து, அழகு , தலைவன் , வியப்பு

ஒ --வினா , மதகு , நீர் தாங்கும் பலகை

கா --சோலை ,காத்தல்

கூ --பூமி , கூவுதல்

கை-- கரம் , உறுப்பு

கோ --அரசன் , தலைவன் , இறைவன்

சா -- இறப்பு , மரணம் , பேய் , சாதல்

சீ -- இகழ்ச்சி ,திருமகள்

சே --எருது , அழிஞ்சில் மரம்

சோ -- மதில்

தா --கொடு , கேட்பது

தீ -- நெருப்பு

து --கேடு ,உண், பிரிவு , உணவு ,பறவை இறகு

தூ --வெண்மை ,தூய்மை

தே-- நாயகன் , தெய்வம்

தை --மாதம்

நா -- நாக்கு

நீ -- நின்னை

நே --அன்பு ,நேயம்

நை --வருந்து ,நைதல்

நொ-- நொண்டி , துன்பம்

நோ--நோவு , வருத்தம்

நௌ--மரக்கலம்

பா --பாட்டு ,நிழல் ,அழகு

பூ -- மலர்

பே-- மேகம் ,நுரை, அழகு

பை-- பாம்புப் படம் ,பசுமை , உறை

போ --செல்

மா -- மாமரம் ,பெரிய விலங்கு

மீ -- வானம் , மேலே , உயரம்

மு -- மூப்பு

மூ -- மூன்று

மே -- மேல் , மேன்மை

மை -- அஞ்சனம் ,கண்மை . இருள்

மோ -- முகர்தல், மோதல்

யா --அகலம் .மரம்

வா --அழைத்தல்

வீ --பறவை , பூ ,அழகு

வௌ -- கெளவுதல் , கொள்ளை அடித்தல் .

இன்னும் வரும் . அள்ள அள்ள குறைவது அல்ல அல்ல எம் தமிழ் மொழி !

எழுதியவர் : வசிகரன்.க (9-Dec-19, 11:44 am)
பார்வை : 74

சிறந்த கட்டுரைகள்

மேலே