தத்துவச் சிதறல்கள் - வெண்பாவில் வடித்த அந்தாதிக் கவிதைகள் - பகுதி 1

மறுத்திடுவோம் அற்ப மடமையை, என்றும்

நிறுத்திடுவோம் நெஞ்சில் நெருப்பை - அறுத்திடுவோம்
பொய்ம்மை அறஞ்சொல்லும் போர்க்குணத்தை முன்போலே
மெய்ம்மை மிளிரச் சிறந்து.

சிறந்திடும் சிந்தைச் சீர்ப்படுநன் னெஞ்சம்
பிறந்திடும் பேரிணக்கம் பாரில் - அறந்தகர்க்கும்
பேதங்கள் நீங்கிப் பிரிவிழந்த நாடுகளால்
தீதற்ற நன்மை நமக்கு.

எழுதியவர் : இமயவரம்பன் (22-Dec-19, 7:54 am)
சேர்த்தது : இமயவரம்பன்
பார்வை : 409

மேலே