நிலாப் பார்க்க வந்தாள்

முல்லைப்பூந் தோட்டம் முழுநிலவைப் பார்க்க வந்ததோ
முத்துப்பே ழைமுழு நிலாவிற்கு நன்றிசொல்ல வந்ததோ
அல்லிக் குளத்திற்கு அழகு செய்திட ஒருநாயகி
இல்லை என்றகுறை தீர்த்திட வந்ததோ எழில்ரோஜா !

முல்லைப்பூ முழுநிலவைப் பார்க்க வந்ததோ
முத்துப்பே ழைமுழு நிலாவிற்கு நன்றிசொல்லுதோ
அல்லிக் குளத்திற்கு அழகிய ஒருநாயகி
இல்லையென்ற குறைதீர்க்க வந்ததோ இந்தரோஜா !

முல்லை முழுநிலவைப் பார்த்திட வந்ததோ
நல்முத்து வெண்மதிக்கு நன்றி நவிலுதோ
இல்லையோர் நாயகி என்றகுறை இன்றில்லை
அல்லி எழில்குளத்தி னில் !

----முறையே கலித்துறை கலிவிருத்தம் வெண்பா !
மூன்று பாவிலும் வெண்பா எப்படி இனிமையாய் உயர்ந்து நிற்கிறது என்பதை
நல்லிலக்கியம் ரசிப்போர் அறிவர் .

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-20, 10:23 am)
பார்வை : 83

மேலே