பெண்
மலர்போல் மென்மையானவள் பெண்
மலரே என்கிறோம், மலர் விழியே என்கிறோம்
இதனால் ...... ஆயின் பெண் எப்போதும்
மென்மையாய் இருந்துவிட்டால் இந்த உலகம்
அவளை வாழ விடுவதில்லையே
அதனால் விழித்தெழு பெண்ணே ஆண்போல்
வம்புக்கு வருவோரை உருமாறி
காளியாய் அந்த வீணருடன் பொருதி மாய்த்துவிடு
ஒரு வீராங்கனையாய் ....... ஆனால் எப்போதும்
நீ ஒரு தாயாய் அன்பின் உறைவிடம் அதனால் நீ
மென்மையானவள் என்பதை மறந்துவிடாதே