துறந்தார், எல்லாம் துறந்தாரில்லை---------------------- 22112016

பங்குச்சந்தையில் குறிப்பிட்ட கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, விற்று கொள்ளையாக பணம் சம்பாதிக்க சில துறவிகள் டிப்ஸ் தருகிறார்களாம். காலைப் பலகாரத்துக்கு மல்லிகைப் பூப்போன்றே இட்லியையும், எள்ளு மிளகாய்ப் பொடியையும், நாட்டுச்செக்கு நல்லெண்ணையையும்கூட துறக்காதவர் மனிதகுலத்துக்கு என்ன மாண்பும், மகிமையும் சேர்த்துவிடப் போகிறார்கள்? உதிர்ந்த மயிரைக்கூட அவர்களால் ஒட்டவைக்க இயலாது! கோடி ரூபாய் நன்கொடை செய்பவனுக்கு என்று விலை மதிப்பற்ற அருளும், பத்து ரூபாய்க்கும் போக்கற்றவனுக்கு மலிவுவிலை அருளும் தயாரிக்குமா துறவு?? (நாஞ்சில் நாடன்)

எழுதியவர் : நாஞ்சில் நாடன் (23-Jan-20, 9:25 pm)
பார்வை : 15

மேலே