விலகுதலும் பழகுதலும்

உன்னுடன் பாசதாரிகளாக
பழகுபவர்கள் வேசதாரிகளாக
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
நீ அவர்களை புரியாதவரை...

நீ அவர்களை
புரிந்துகொள்ளும்போது
அவர்கள் உன்னைவிட்டு
விலகுகிறார்கள்....

விலகுதலும் பழகுதலும்
சூழ்நிலையால் நடக்கிறது
நடிக்கிறவர்கள் நட்பாக
இருப்பதில்லை
நல்லபாம்பாக இருப்பவர்கள்
உன்னைவிட்டு நகர்ந்து
போவார்களே தவிர
ஒருநாளும் உன்னை
கடிக்கமாட்டார்கள்

உண்மையாய் இருப்பவர்கள்
கவிதையில் வரும்
கருப்பொருளாய்
வாழ்ந்து கொண்டே
இருப்பார்கள்
இன்பம் துன்பம்
எது வந்தாலும்
உங்களுடன் ஆற்றுப்படையாய்
இருப்பார்களே தவிர
மரம் வெட்டும்
கோடாலியாய்
உங்களை சாய்த்து
விட மாட்டார்கள்

எழுதியவர் : கவிதைப் பித்தன் அரி (25-Jan-20, 1:39 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 264

மேலே