வெறுமை

உன் கைப்பிடித்துப் பழகிய விரல்களுக்கு இன்று வெறுமையின் ரணமாய் ஒற்றைப் பயணம்..!
தந்தைமடி தேடும் உறவாய்.., அன்னை முகத்திற்கு ஏங்கும் உணர்வாய்...
அத்தனை உறவையும் நகலெடுத்துவிட்டு,, இன்று என் அத்தனை உறவும் கலந்த உன்னொருவனை மட்டும் தேடித் தவிக்கும் என் நாழிகைகள்..!
உன்னை எண்ணிய கணங்களின் இரவுநேரக் கண்ணீர் துளிகளை ஒட்டுமொத்த நதிகள் தத்தெடுத்துக் கொண்டன...!

எழுதியவர் : சரண்யா (27-Jan-20, 2:07 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : verumai
பார்வை : 128

மேலே