அவள்

மார்கழி இளங்காலை வேளை
மாதவள் வீட்டின் முன்னே
பசும் சாணம் தெளித்து மெழுகி
அதன் மீது போட்ட கோலம்
அவள் உள்ளத்தின் அழகின் எதிரொலி
அதன் மீது பசுஞ்சாண குப்பி மீது
அவள் வைத்த மஞ்சள் பூசணிப்பூ
அவள் மனம் பசும்பொன் என்றது
அவளறியாது அவள் அழகை ரசித்தேன் நான்
'கோலத்தில்' தன்னையே மறந்த அந்த
கிராமத்து பசும்பொன்பேரழகை

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (27-Jan-20, 2:45 pm)
Tanglish : aval
பார்வை : 120

மேலே