சுற்றம் மறந்துபோவேன்

கண்ணாடி முன் அமர்ந்து

அலங்காரம் முடித்து நகரும்
முன்

என்னைக் கண்டு நீ வியக்கும்
அந்த நொடியை

யோசிக்கும் நேரம் என்
கற்பனை

சிறகை விரித்துவிட அப்படியே

அமர்ந்து விடும் நான் உன்

குரல் கேட்கும் வரை சுற்றம்
மறந்து போவேன்

எழுதியவர் : நா.சேகர் (4-Feb-20, 8:40 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 291

மேலே