காதல்
காதல்..!!
வரையரைகளைக் கொண்டு
வர்ணிக்க முடியாத
உணர்வெனும் மிரள்ச்சிகளின்
உச்சம் - அதில்
வாழ்பவர்களின் எண்ணங்களுக்கு
ஏற்றாற்போல் தன் உருவத்தை
மாற்றிக்கொள்ளும் தெளிந்த
நீர் போன்றது..!!
வேண்டாமென விலகி
நிற்பவர்களையும் வருடிவிட்டு
வேடிக்கை காட்டும்
மாயைதான் - காதல்..!!
விதிகளும் இல்லாமல்
கட்டுப்பாடுகளும் இல்லாமல்
அன்பினால் ஆளப்படும்
கம்பீர ராஜ்ஜியம்..!!
காதலில்,
கண்ணீரும் உண்டு
கனவுகளும் உண்டு
நிம்மதியோடு கலந்த
நினைவுகளும் உண்டு..!!
எதிர்நேர் எனும் வாழ்வின்
இரு சாராம்சத்தை கலந்து
பூசும் அரிதாரத்தினாலோ என்னவோ
காதலுக்கு முதுமையே
இல்லாமல் போயிற்று..!!