குழந்தையின் சிரிப்பில்

மழலையர் பயிலக வளாகத்தில்
மதங்களின் சாயலில் சிலபேர்
ருசியான உணவுகள் யாவும்
பசியாற பரிமாறினர் பரிவாய்
அளித்த அமுதுக்கு விலையாய்
செலுத்து இறைநன்றி என்றனர்
இரக்கம்நிறை இறைவன் இதனால்
மனமகிழ்ச்சி அங்கே பெறுவானாம்
இரந்துநின்ற தூதருக்கு விடையாய்
மலர்ந்தன மகிழ்ச்சியாய் பிஞ்சுமுகங்கள்

எழுதியவர் : (21-Feb-20, 11:30 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 116

மேலே