சிரிக்க
ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்
சாப்பிட்டு முடிச்சதும் பர்ஸ பாத்தா அதுல பணத்த காணும்
ஷாக் ஆகிட்டேன்
ஆனா ஹோட்டல் மொதலாளி ரொம்ப நல்ல மனுஷனா இருந்தார்
வெறும் 5 கிலோ அரிசி மட்டும் கொடுத்து மாவாட்டச் சொன்னாரு
நானும் கடமையில கண்ணும் கருத்துமா மாவ வேகமா அரைக்க ஆரம்பிச்சேன்
கொஞ்சம் நேரம் கழிச்சி மொதலாளி என்கிட்ட வந்து
"நீங்க தினமும் ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறவர்தானே"
அப்டின்னு கேட்டாரு
உடனே அதிர்ச்சியா நான் அவர்கிட்ட கேட்டேன் "எப்டி Sir கண்டுபுடிச்சீங்க"
அதுக்கு மொதலாளி சொன்னாப்ள...
"அதான் அரச்ச மாவையே திரும்ப திரும்ப அரச்சிக்கிட்டு இருக்கீங்களே"