காதலின் வல்லமை

அன்பே....
நீ சிகை அலங்காரம் செய்த
அந்த அழகு நிலையத்தில்
உதிர்ந்திருக்கும்
ஆயிரமாயிரம் தலைமுடிகளின் மத்தியில்
உன் ஒற்றை தலைமுடியை
பிரித்தறியும் வல்லமை
படைத்தது என் காதல் எனும்போது

மேகத்தில் மறைந்த
நிலவைப்போல்
முழு முகத்தை மூடி
உன் விழிகளை மட்டும் காட்டுகினாலும்
என் விழிகள் அறிந்துக்கொள்ளும்
அது நீ தான் என்று

என்னவளே
துப்பட்டாவை விலக்கி
உன் முழுமுகத்தை காட்டு ...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (1-Mar-20, 7:11 am)
Tanglish : kathalin vellamai
பார்வை : 172

மேலே