செல்லம்மா

சிரிக்கும் என் செல்லம்மா!
சீக்கிரம் என் பக்கம் வா!
சிதறுகின்ற முத்துக்களை
சிந்தாமல் நான் அள்ளவா?

பால் நிலாவும் நாணுமே
பாவை உன்னை பார்க்கையில்!
பார்க்கும் கண்கள் அனைத்துமே
பரவசத்தில் விரியுமே!

நாடி வந்த என்னையே
நாட்கணக்கில் வதைப்பதேன்?
தேடி வந்தேன் பாரம்மா!
தேன்மொழியே கேளம்மா!

பாழும் மனம் துடிக்குது!
பாசம் நெஞ்சை அடைக்குது!
பாவி உயிர் பிரியுமுன்னே
பதில் உரைப்பாய் செல்லம்மா!

நீ எந்தன் பொன்னம்மா!
உன் நினைவு எந்தன் கண்ணம்மா!
கண்ணில்லாத குருடனாய் எனை
காண உந்தன் விருப்பமோ?

காதல் தன்னை உணரம்மா!
காத்திருப்பேன் நானம்மா!
காலம் வேகம் உருளுமுன்
கனிந்திடுவாய் செல்லம்மா!

சிரிக்கும் என் செல்லம்மா!
சீக்கிரம் என் பக்கம் வா!
சிதறுகின்ற முத்துக்களை
சிந்தாமல் நான் அள்ளவா?

எழுதியவர் : திருமகள் (2-Mar-20, 11:24 pm)
Tanglish : chellamma
பார்வை : 144

மேலே