எனக்கெதுவும் வேண்டாம்

எதையோ வேண்டிக்கொண்டானாம்
அதனால்

வேண்டாதவனுக்கு படையலிட்டானாம்

வேண்டுதலும் வேண்டாமையும்
இல்லாதான்

சிரித்து கேட்டுக்கொண்டானாம்

எனக்கெதுவும் வேண்டாம்

உனக்கு வேண்டியதைத்தர தெரியும்
எனக்கு

நான் வேண்டுவது உன்னிடம் மனிதம் மட்டுமே என்றானாம்

எழுதியவர் : நா.சேகர் (5-Mar-20, 8:15 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 206

மேலே