தெய்வம் நம்பிக்கைதான்


கல்லில் சிலை வடித்தான்
கலைஞன்
கடவுள் என்று
பெயர் கொடுத்தான்
ஆலயம் நிறுவி
வழிபட்டான்

சிலை என்றால்
கலைஞன்
கற்பனைதான்
தெய்வம் என்பது
நம்பிக்கைதான்

நம்பாதவனுக்கு
அது கல்
நம்புவனுக்கு
கடவுள்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Sep-11, 12:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 304

மேலே