வண்ணப் பாடல்

வண்ணப்பாடல்....!!!
************************
தான தானதன தான தானதன
தான தானதன தனதானா

சேவ லாடமயி லாட வேலனொடு
தேரு மாடிவரு மழகோடே!
தேவ தேவனொடு கோல தேவியொடு
சீவ னாடிவரு மொளியோடே!

ஆவ லோடுமனம் வானி லேவிரிய
ஆசை மோதவரு மலைபோலே!
ஆவி போகுமுனம் பாவி யேனுயிரும்
ஆடி யாடியுனை யடையாதோ!

நாவி லேயுனது நாம மேமொழிய
நாத னேகருணை புரிவாயே!
ஞான மேவடிவ மான மாமுனியை
நாடி யேதொழுது மகிழ்வேனே!

பாவி லேயுருகி வீடு பேரருளும்
பால னேநினடி பணிவேனே!
பாதை யானறிய மூல மாமுனது
பாத மேபணிய வருள்வாயே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Mar-20, 2:25 am)
பார்வை : 44

மேலே